Our Feeds


Tuesday, October 17, 2023

Anonymous

“எங்களுக்கு வாழவே பிடிக்கல..!” - கிளிநொச்சியில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்த 2 சிறுமிகள்.

 



இரு சிறுமிகள் கடிதம் எழுதி வைத்து விட்டு, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கிளிநொச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நேற்று (16) பிற்பகல் இரண்டு மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுரேஸ்குமார் தனிகை மற்றும் லோகேஸ்வரன் தமிழினி என்ற 17 வயதுடைய சிறுமிகளே தமிழினியின் வீட்டுச் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.

இவர்கள் இருவரும் இறுதியாக நடைப்பெற்ற க.பொ.த சாதாரன தரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுக்காக காத்திருக்கும் மாணவிகள் ஆவா்.

சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார் சடலத்தை மீட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்தோடு இது தற்கொலையா? கொலையா என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »