Our Feeds


Monday, October 2, 2023

SHAHNI RAMEES

குளவி கொட்டுக்கு இலக்கான 26 பேர் வைத்தியசாலையில்...

 

வென்னப்புவ - மார்ட்டின் வனக் கல்லூரியின் அதிபர் உட்பட 26 பேர் இன்று (02) பிற்பகல் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

குளவிக் கொட்டுக்கு இலக்கான அதிபர் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் லுணுவில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்களில் அதிபர், நான்கு ஆசிரியர்கள் மற்றும் 21 மாணவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

மேலும், அதிபர், இரண்டு ஆசிரியர்கள் மற்றும் நான்கு மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக லுணுவில வைத்தியசாலையிலிருந்து, மாரவில தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

குறித்த பாடசாலைக்கு அருகில் உள்ள தோட்டத்தில் இருந்த குளவிக் கூட்டில் இருந்த குளவிகளே இவ்வாறு தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

ரஸீன் ரஸ்மின்


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »