நாட்டில் இவ்வருடத்தில் கடந்த செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மீதான 168 பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
இதனை கொழும்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
168 பாலியல் துஸ்பிரயோக சம்பவங்களில் 22 பேர் கர்ப்பம் தரித்துள்ளார்கள்.
சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தரவுகளின்படி, 2021 ஆம் ஆண்டில் இலங்கையில் மொத்தம் 11,000 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
2022 ஆம் ஆண்டில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களில் குறைந்தது 41 சதவீதம் பாலியல் துஷ்பிரயோகங்களின் கீழ் பதிவாகியுள்ளன.
இவ்வருடத்தில் செப்டெம்பர் மாதத்தில் பதிவான சம்பவங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது அதிகரித்து காணப்படுகிறது என தெரிவித்துள்ளார்.