கொழும்பின் சில முக்கிய பகுதிகளுக்கு 15 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி கொழும்பு 11, 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளிலேயே குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி வரை இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய பராமறிப்பு பணிகள் காரணமாக நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.