Our Feeds


Friday, October 13, 2023

News Editor

இலங்கையில் 15 சதவீத மாணவர்கள் கண்பார்வை குறைபாட்டால் பாதிப்பு !


 இலங்கையில் 15 சதவீத பாடசாலை மாணவர்கள் தொலைதூரக் கண்பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையின் கண் மருத்துவர் ஹிரண்ய குணசேகர தெரிவித்துள்ளார்.

உலக கண்பார்வை தினத்தை முன்னிட்டு தேசிய கண் வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், 

குழந்தைகளின் கண் நோய்கள் குறித்து பெற்றோர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏதேனும் குழந்தை கண் நோயால் பாதிக்கப்பட்டால் உடனடியாக சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும்.

குழந்தைகள் மிக அருகில் தொலைகாட்சி பார்ப்பது, புத்தகங்களைப் படிப்பது, தலைவலி, அடிக்கடி கண் சிமிட்டுதல் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடி சிகிச்சை பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நீரிழிவு நோயினால் ஏற்படும் கிளௌகோமாவின் பக்கவிளைவாக குருந்தூர கண்பார்வை குறைபாடு பாதிப்பும் உள்ளது.

குருந்தூர கண்பார்வை குறைபாடு மயோபியா என்று அழைக்கப்படுகிறது. இந்த பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு பிரெய்லியை அறிமுகப்படுத்தக்கூடாது. சில குழந்தைகள் குருந்தூர கண்பார்வை குறைபாடுடன் பிறக்கிறார்கள், பெரும்பாலும் கர்ப்ப காலத்தில் ரூபெல்லாவின் வெளிப்பாட்டின் காரணமாகவும் இந்தப் பாதிப்பு ஏற்படுகின்றது.

உலகில் சுமார் 128 மில்லியன் மக்கள் இத்தகைய கருந்தூர பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்படுகின்றனர் எனவே பெற்றோர்கள் இது குறித்து குழந்தைகளிடம் மிகவும் அவதானத்துடன் இருத்தல் அவசியம்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »