Our Feeds


Thursday, October 26, 2023

News Editor

13 மில்கோ நிறுவன ஊழியர்களுக்கும் பிணை


 மில்கோ நிறுவனத்தின் ஊழியர்கள் 13 பேர் தலா 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேணுகா பெரேரா உட்பட அதன் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை பலவந்தமாக தடுத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த 15 பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

 

இந்நிலையில், அவர்கள் இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

நேற்று (25) மாலை மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேணுகா பெரேரா மற்றும் பல நிர்வாக சபை உறுப்பினர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறாத வகையில் மில்கோ நிறுவனத்தின் ஊழியர்கள் குழுவொன்று செயற்பட்டுள்ளது.

 

இது ஊழியர் நலன்கள் பிரச்சினை தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலாகும்.

 

இது தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு வழங்கிய அறிவித்தலின் பிரகாரம், பொலிஸாரின் தலையீட்டின் பின்னர் தலைவர் மற்றும் குழுவினர் வெளியே அழைத்து வரப்பட்டனர்.

 

இச்சம்பவம் தொடர்பாக மில்கோ நிறுவனத்தின் தொழிற்சங்க தலைவர்கள் உட்பட 13 பேரை கொள்ளுப்பிட்டி பொலிஸார் நேற்று இரவு கைது செய்தனர்.

 

மில்கோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக சிறையில் அடைத்த குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »