Our Feeds


Thursday, September 21, 2023

Anonymous

நாட்டை நாசமாக்கிய SLPP, MP க்களை வெளிநாட்டுக்கு அழைத்து சென்ற ஜனாதிபதி - சஜித் காட்டம்



நாடு வங்குரோத்தடைந்துள்ள நிலையில், மக்களின் வாழ்வாதாரம், வியாபார நடவடிக்கைகள் சீரழிந்துள்ள இவ்வேளையில், நாட்டை வங்குரோத்தடையச் செய்ய உறுதுணையாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தொடருக்குச் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், 


அரச அதிகாரிகளை அழைத்துச் சென்றாலும் நாடு வங்குரோத்தாகுவதற்கு காரணமானவர்களை அழைத்துச் செல்வது பொதுமக்களின் பணத்தை வீணடிக்கும் செயல் என்றும், நாட்டு மக்களின் வரிப்பணத்தை மொட்டு எம்.பி.க்களை திருப்திப்படுத்துவதற்கு பயன்படுத்துவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று வியாழக்கிழமை (21) பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கூட இது குறித்து கலந்துரையாடப்படாததால்  இவ்வாறானதொன்றை செய்ய முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »