Our Feeds


Monday, September 11, 2023

Anonymous

ராஜகுமாரியின் மரணத்தின் பின் இடமாற்றம் செய்யப்பட்ட OIC க்கு மீண்டும் அதே இடத்தில் பணி.



ராஜன் ராஜகுமாரி என்ற  பணிப் பெண்ணின் மரணத்தின் பின்னர் வெலிக்கடை பொலிஸிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட  பொறுப்பதிகாரி மீண்டும் அதே பதவியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக நீதிமன்றத்தில் இன்று (11)  தெரியவந்துள்ளது.


பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஆஜரான சட்டத்தரணி சேனக பெரேரா, நீதிமன்றத்தில்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, ராஜன் ராஜகுமாரி என்ற பணிப்  பெண்ணின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வெலிக்கடை பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வரும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »