Our Feeds


Thursday, September 21, 2023

Anonymous

சிறுவன் துஷ்பிரயோகம் - பௌத்த பிக்கு அதிரடி கைது



13 வயது சிறுவனை பாலியல்  துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் பௌத்த மதத்துறவி ஒருவரை எஹட்டுவெவ  பொலிஸார் கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்டவர் போகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள ரஜமஹா விஹாரை ஒன்றில் வாழ்ந்துவரும் துறவி எனத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரான பிக்கு வசிக்கும் விஹாரையில் சிறுவன் ஒருவன் பாரிய பாலியல் துஷ்பிரயோகத்துக்கு  முகங்கொடுத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல் கிடைத்துள்ளது.

குறித்த தகவல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை எஹட்டுவெவ  பொலிஸாருக்கு அறிவித்திருந்தது.  

இதன்படி, எஹட்டுவெவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்துக்கு  உள்ளான சிறுவன்  மருத்துவ பரிசோதனைக்காக  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »