Our Feeds


Saturday, September 2, 2023

News Editor

அட்டன் - கொழும்பு வீதியில் கினிகத்தேனை கடவளை பகுதியில் போக்குவரத்து பாதிப்பு



 கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடவளை பகுதியில் இன்று  சனிக்கிழமை (02)  காலை மரம் ஒன்று வீதியின் குறுக்கே சரிந்து வீழ்ந்துள்ளதால் அட்டன் - கொழும்பு, அட்டன் - கண்டி வீதிகளில் போக்குவத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இப்பகுதியில் பெய்த கடும் மழையை தொடர்ந்து இந்த மரம் சரிந்து வீழ்ந்துள்ளதுடன் குறித்த மரம் வீதியின் குறுக்கே வீழ்ந்ததன் காரணமாக இந்த வீதி ஊடாக முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் சிறிய வாகனங்கள் ஆபத்தின் மத்தியிலும் மரத்தின் கீழால் வீதியை கடக்க முடிவதுடன் ஏனைய வாகனங்களுக்கு வீதியை கடக முடியாத நிலை காணப்படுகின்றது.

இதன் காரணமாக இந்த வீதியூடான போக்குரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் அட்டன் - கொழும்பு, அட்டன்  - கண்டி வீதியை பயன்படுத்தும் சாரதிகளை தற்காலிகமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் மரத்தினை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கினிகத்தேனை பொலிசார் தெரிவித்தனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »