Our Feeds


Friday, September 1, 2023

SHAHNI RAMEES

நாளை இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்...!

 

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக நாளை 02 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.



அதன்படி, 3 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.



இரு நாடுகளுக்கும் இடையே பலமான நட்புறவை கட்டியெழுப்புவதில் முக்கிய அடையாளமாக இந்த விஜயம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த விஜயத்தின் போது அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.



இந்த சந்திப்பின் போது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் குறித்து இரு தரப்பும் மறுஆய்வு செய்யப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »