Our Feeds


Tuesday, September 12, 2023

SHAHNI RAMEES

முஸ்லிம் சமூகத்தை மீண்டும் பலிக்கடாவாக்க வேண்டாம் - பிள்ளையானுக்கு ஹரீஸ் எம்.பி எச்சரிக்கை

 

போலியான கருத்துக்களை வெளியிட்டு பிள்ளையான் போன்றவர்கள் மீண்டும் முஸ்லிம் சமூகத்தை பலிக்கடாவாக்க அனுமதிக்க முடியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் செயலாளராக இருந்த ஆசாத் மௌலானா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள கருத்தினால் மக்கள் பல்வேறு சந்தேகங்களுடன் இருக்கிறார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.அம்பாறையில் நேற்று (11) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டாா். 



சஹ்ரானின் சகோதரருடன் தொடர்புள்ள பிள்ளையான்  தன்னை காப்பாற்றுவதற்காக முஸ்லிம் சமூகத்தை மீண்டும்  பயங்கரவாத முத்திரை குத்துவதை நிறுத்த வேண்டும் என்பதுடன் சஹ்ரானின் சகோதரருடன் தொடர்புள்ளதை பல இடங்களில் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்துள்ள நிலையில், அவர் தன்னை காப்பாற்றுவதற்காக முஸ்லிம் சமூகத்தை மீண்டும் மீண்டும் பயங்கரவாத முத்திரை குத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினாா். 



அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 



உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தற்போது முஸ்லிம் மக்கள் மீது சிலர் சுயநலத்திற்காக பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதை எம்மால் ஏற்க முடியாது. நாட்டை உலுக்கிய உயிரித்த ஞாயிற தின தாக்குதல் ஆட்சி மாற்றத்தை இலக்குவைத்து நடத்தப்பட்டதாகவே கருதுகின்றேன்.



மக்கள் பிரதிநிதி என்ற வகையில் தாக்குதல் தொடர்பிலான மௌலானாவின் ஊடக கருத்தினை அடிப்படையாக கொண்டு ஓய்வுபெற்ற நீதிபதிகளை கொண்டு ஜனாதிபதி நியமிக்கவுள்ள விசாரணைக்குழுவுக்கு மேலதிகமாக புலனாய்வு பிரிவின் குழுவொன்றும் விசாரணைக்காக நியமிக்கப்பட வேண்டும் .கடந்தகாலங்களில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கைகள் மழுப்பல் நிலையிலையே வெளிவந்தது.



 அதில் யாருக்கும் திருப்தியில்லை. இந்த தாக்குதலானது பாரதூரமான விளைவுகளை உண்டாக்கிய ஒன்றாகும். இந்த விடயம் தொடர்பில் சர்வதேச பொலிஸாரின் புலனாய்வு அறிக்கைகள் பெறப்பட வேண்டும். சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.கார்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்த தாக்குகளின் பின்னணியில் பெரிய சக்திகள் இருப்பதாக ஆரம்பம் முதலே கூறிவருகிறார். இந்த தாக்குகளில் முஸ்லிங்களும்இ கிறிஸ்தவர்களும் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் -என்றார்.



-பாறுக் ஷிஹான்-


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »