Our Feeds


Saturday, September 16, 2023

Anonymous

அனைவருக்கும் நியாயம் செய்யும் தலைவராகவே நான் இருந்திருக்கிறேன். - சாய்ந்தமருதில் ரவுப் ஹக்கீம் பேச்சு



இலங்கை முஸ்லிம்களின் அரசியல் அஷ்ரபுக்கு முன், அஷ்ரபுக்கு பின் என்று எழுதப்படும் அளவுக்கு உன்னதமான தலைவரை பெற்றிருக்கும் இயக்கம் தான் முஸ்லிம் காங்கிரஸ் இதனை யாரும் சீரழித்து விட முடியாது. நான் அனைவருக்கும் நியாயம் செய்யும் தலைவராகவே இருந்திருக்கிறேன். அடுத்த தேர்தல்களிலும் நாம் உச்சத்தை தொடுவோம். என இன்று சாய்ந்தமருது பௌசி மைதானத்தில் இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் “பெருந்தலைவர் நினைவேந்தல்” நிகழ்வில் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.


(சர்ஜுன் லாபீர்)


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் 23 வது நினைவேந்தல் நிகழ்வு இன்று (16) சாய்ந்தமருது பெளஸி மைதானத்தில் மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.


கட்சியின் தவிசாளர் ஏ.எல்.எம்.மஜிட்  தலைமையில் இடம்பெற்ற இவ் நினைவேந்தல் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு சிறப்பித்தார். 


மேலும் இந்நிகழ்வுக்கு சிறப்பு அதிதியாக இந்தியா வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் கவிமாமணி பேராசிரியர் முனைவர் அப்துல் காதர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.


மேலும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம் ஹரீஸ், எம்.எஸ் தெளபீக், முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், கட்சியின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம் மன்சூர், அலி சாஹீர் மெளலானா, ஹுனைஸ் பாருக், முன்னாள் மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள், என பல்லாயிரக்கணக்கான போராளிகள் கலந்து கொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »