Our Feeds


Sunday, September 24, 2023

Anonymous

சினிமா பாணியில் பஸ்ஸை் நிறுத்தி ட்ரைவரை கடத்திய கும்பல் - கம்பளையில் அதிர்ச்சி



கம்பளை பகுதியில் இன்று (24) காலை 46 வயதுடைய பஸ் சாரதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாவெலயிலிருந்து கம்பளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸை வான் ஒன்றில் வந்த சிலர் மறித்து சாரதியை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பஸ் சாரதி வத்தேகம பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்தலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »