Our Feeds


Wednesday, September 27, 2023

SHAHNI RAMEES

தொழிலாளர்கள் போராட்டத்தில் களத்தில் இறங்கிய ஜனாதிபதி ஜோ பைடன்..!

 

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்று வரும் ஆட்டோமொபைல் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.



மிச்சிகன் மாகாணத்தில் இடம்பெற்ற ஆட்டோமொபைல் தொழிலாளர்கள் போராட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி நேற்று (26) கலந்து கொண்டார். 



ஜனாதிபதி தேர்தலுக்கான பரபரப்பு அதிகரித்துள்ள நேரத்தில் ஜோ பைடனின் இந்த செயல் முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.



மேலும் அமெரிக்க வரலாற்றிலேயே தொழிலாளர்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட முதல் ஜனாதிபதி என்ற பெருமையையும் ஜோ பைடன் பெற்றுள்ளார்.



ஆட்டோமொபைல் தொழிலாளர் கூட்டமைப்பு (UAW) சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியை அணிந்தபடி போராட்டத்தில் கலந்து கொண்ட பைடன், தொழிலாளர்களுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்தார். 



போராட்டத்தில் ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில்,'தொழிலாளர்கள் தற்போது வாங்குவதை விட அதிக சம்பளம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்' என தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »