Our Feeds


Friday, September 1, 2023

News Editor

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, புலத்சிங்கல மற்றும் இங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, புலத்கொஹுபிட்டிய, யட்டியந்தோட்டை, தெஹியோவிட்ட மற்றும் ருவன்வெல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இன்று இரவு 8 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தின் அஹலியகொட மற்றும் குருவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழும் மக்களும் மண்சரிவு, பாறைகள் சரிவு மற்றும் மண்சரிவுகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »