Our Feeds


Friday, September 1, 2023

News Editor

இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட பெருமளவு தங்கம்



 இலங்கையில் இருந்து கடல் வழியாக இந்தியாவுக்கு கடத்திச்  செல்லப்பட்ட 14.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து கடல் வழியாக தங்கம் கடத்தப்பட்டுள்ளதாக சுங்கத்துரை அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதற்கமைய ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே களிமண்குண்டு கடற்கரை பகுதியில் நேற்று புதன்கிழமை (30)  ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள்  சோதனை நடத்தினர்.

இதன் போது  இலங்கையில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்டு இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டிருந்த 14.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும்  இருசக்கர வாகனத்தில்  தங்கம் கொண்டு வந்தவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »