Our Feeds


Saturday, September 2, 2023

Anonymous

அதிர்சித் தகவல் - நாட்டிலிருந்து வெளியேறியுள்ள 786 மருத்துவர்கள்.



இரத்தினபுரி பொது வைத்தியசாலை சேவையில் மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இரத்தினபுரி மாவட்ட குழு உறுப்பினர் வைத்தியர் மகேந்திர பண்டார தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,



இரத்தினபுரி பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தற்போது விசேட மருத்துவர்கள் எவரும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.



சுகாதார அமைச்சின் தரவுகளுக்கு அமைய கடந்த ஒன்றரை வருடக் காலப்பகுதியில் 272 விசேட மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.



514 ஏனைய வைத்தியர்களும் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இந்தநிலை தற்போது இரத்தினபுரி பொது வைத்தியசாலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.



குறிப்பாக வைத்தியசாலை மற்றும் அவசர சிகிச்சை பிரிவு என்பவற்றில் சேவையாற்றிய பல விசேட மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.



விசேட மருத்துவர்கள் இன்மையால், அவசர சிகிச்சை பிரிவின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பாரிய சிக்கல் நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »