Our Feeds


Sunday, September 3, 2023

Anonymous

ஈக்குவடோரில் சிறைக்கைதிகளால் பணயக் கைதி­க­ளாக வைக்­கப்­பட்­டி­ருந்த 57 அதிகாரிகள் விடுதலை



ஈக்­வ­டோரில் சிறைச்­­சாலை பணயக் கைதி­க­ளாக தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த 50 சிறைக்­கா­வ­லர்­களும் 7 பொலி­ஸாரும் கைதி­களால் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். 


தென் அமெ­ரிக்க நாடான ஈக்­வ­டோரின் 6 சிறை­களில் மேற்­படி அதி­கா­ரிகள், கைதி­களால் பண­யக்­கை­தி­க­ளாக தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­தாக அந்­நாட்டு உள்­துறை அமைச்சர் ஜுவான் சபாத்தா வியா­ழக்­கி­ழமை தெரி­வித்­தி­ருந்தார். 


மேற்­படி 57 அதி­கா­ரி­களும் கைதி­களால் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர் எனவும் அவர்­க­ளுக்­கான மருத்­துவ பரிசோத­னைகள் நடை­பெ­று­வ­தா­கவும் ஈக்­வடோர் சிறைச்­சாலை அதி­கா­ரிகள் வெள்­ளிக்­கி­ழமை (01) தெரி­வித்­துள்­ளனர். 

சிறையில் தமது பலத்தைக் குறைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை விரும்­பாத கிரி­மினல் குழுக்­களின் ஏற்­பாட்டில் அதி­கா­ரிகள் கடத்­தப்­பட்­டி­ருந்­ததாக  அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

தலை­நகர் குய்­டோவில் புதன்­கி­ழமை நடை­­பெற்ற இரு குண்­டு­வெ­டிப்­பு­க­ளுக்­கும் இக்­கு­ழுக்கள் காரணம் என அதி­கா­ரி­கள் குற்றம் சுமத்­தி­யி­ருந்­தனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »