Our Feeds


Wednesday, September 27, 2023

SHAHNI RAMEES

4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முன்பள்ளி கல்வி கட்டாயமாக்கப்படும் – கல்வி அமைச்சர்

 

நான்கு வயதை எட்டும் அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி (முன்பள்ளி) கட்டாயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

 

பாடசாலை சுகாதார ஊக்குவிப்பு மாதத்தை முன்னிட்டு பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

 

இலவசக் கல்வியைக் கொண்ட உலகின் ஒருசில நாடுகளில் ஒன்றாக இலங்கை விளங்கும் அதே வேளையில், முதலாம் ஆண்டு முதல் பல்கலைக்கழகம் வரை இலவச கல்வி வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

 

அதனடிப்படையில், கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகளுக்காக அரசாங்கம் தேவையின் அடிப்படையில், இடவசதி உள்ள ஆரம்ப பாடசாலைகளில் முன்பள்ளிகளை நடத்தலாம். மூடப்படும் சவாலை எதிர்கொள்ளும் பாடசாலைகளுக்கு இது ஒரு தீர்வாக இருக்கும்.

 

குழந்தைகளின் முறையான ஆரம்ப கல்வி வளர்ச்சியே இந்த நாட்டில் கல்வி மாற்ற சீர்திருத்தங்களில் வெற்றி பெறுவதற்கான மிக அடிப்படையாகும் என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »