(எம்.ஆர்.எம். வசீம். இராஜதுரை ஹஷான்)
மொட்டு கட்சியின் பிங்கிரிய தொகுதி மாநாடு பிங்கிரிய பிரதேச சபையில் நடத்தியமை தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார சபைக்கு தெளிவுப்படுத்துகையில், ஆளும் கட்சி பிரதம கொறடா அமைச்சர் பிரசன்ன ரணங்க அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இவ்வாறான விடயங்களுக்கு இடமளிக்க வேண்டாம் என சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகரை கேட்டுக்கொண்டதற்கு அமைய பிரதி நபாநாயகரும் அதற்கு இடமளிக்க மறுத்ததால் சபையில் கடும் சர்ச்சை ஏற்பட்டது.
சபையை கட்டுப்படுத்த முடியாமல் பிரதி சபாநாயகர் சபை நடவடிக்கையை இன்று புதன்கிழமை (23) 10 நிமிடங்களுக்கு இடைநிறுத்துவதாக தெரிவித்து சபையை 10 நிமிடங்களுக்கு ஒத்துவைத்தார்.
சபை நடவடிக்கை மீண்டும் சபாநாயகரின் தலைமையில் கூடியபோது நளின் பண்டார மற்றும் வசந்த யாப்பா அபேவரத்தன ஆகிய இருவரையும் சபையில் இருந்து வெளியேறுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.
அதன்படி, இரண்டு எம்.பி.க்களும் சபையிலிருந்து வெளியேறினார்கள்.