Our Feeds


Monday, August 28, 2023

Anonymous

புதிதாக மேலும் இரண்டு வங்கிகளை அமைக்க வேண்டும் - நாமல் ராஜபக்ஷ கோரிக்கை.

 



அரச மற்றும் தனியார் பங்காளித்துவத்துடன் இரண்டு வங்கிகளை அமைக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ முன்மொழிந்தார். 


பொரளையில் சனிக்கிழமை (26) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  கூட்டத்தின் போது உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.

முதலீட்டு வங்கி ஒன்றையும் அபிவிருத்தி வங்கி ஒன்றையும் அமைக்க வேண்டும் என்றும் பெரிய, சிறு மற்றும் நடுத்தர வணிகர்களின் நலன்களுக்கு சேவை செய்யும் இந்த இரண்டு வங்கிகளிலும் அரச மற்றும் தனியார் துறை இரண்டும் பங்குகளை வைத்திருக்க முடியும் என்றார்.

மாறிவரும் உலகின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இவை அமைக்கப்பட வேண்டும் எனவும் நீண்ட கால மற்றும் குறுகிய கால கடன்களை அபிவிருத்தி வங்கி வழங்க முடியும் என்ற அதே நேரத்தில் முதலீட்டு வங்கி வெளிநாடுகளில் முதலீடு செய்ய விரும்பும் இலங்கை தொழில்முனைவோருக்கு உதவ முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »