Our Feeds


Friday, August 25, 2023

SHAHNI RAMEES

கொள்ளுப்பிட்டி உணவகமொன்றில் பிரியாணியில் புழு...!

 

கொள்ளுப்பிட்டி பிரதேசத்திலுள்ள உணவகம் ஒன்று புழுக்களுடன் உணவுகளை வழங்கியதால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



இது தொடர்பில் வெள்ளவத்தை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



சட்டத்தரணி ஒருவர் உணவகத்தில் இருந்து உணவை எடுத்துச் சென்று வீட்டில் சாப்பிடத் தயாரான போது அதில் புழுக்கள் இருந்தமையை கண்டுள்ளார். இதன் தொடர்ந்து அவர் உரியவர்களுக்கு முறைப்பாடு செய்துள்ளார்.



உணவகம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெள்ளவத்தை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »