Our Feeds


Sunday, August 27, 2023

SHAHNI RAMEES

இரண்டாவது முறையாக சிம்பாப்பேயின் ஜனாதிபதியாக இமேர்சன் நன்கக்வா!

 

சிம்பாப்பே ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி இமேர்சன் நன்கக்வா இரண்டாவது முறையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



52.6 சதவீதமான வாக்குகளை பெற்று அவர் தெரிவாகியுள்ள போதிலும் பரந்த அளவில் வாக்கு மோசடிகள் நடந்துள்ளதாக எதிர்கட்சி குற்றச்சாட்டியுள்ளது.



தேர்தல் வாக்குப்பதிவு நடவடிக்கைகள் சர்வதேச தரத்தை கொண்டிருக்கவில்லையென தேர்தலை கண்காணிக்கும் பார்வையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.



கடந்த 2017 ஆம் ஆண்டு சிரேஷ்ட அரசியல்வாதியான ரொபேட் முகாபேக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆட்சி கவிழ்ப்பையடுத்து இவர் ஆட்சி நிர்வாகத்தை பொறுப்பேற்றார்.



சர்வதேச ரீதியாக பெரும் பண வீக்கம், வறுமை, வேலையில்லா பிரச்சனை மற்றும் பாதுகாப்பற்ற சூழலில் சிம்பாப்பே மக்கள் வாழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »