Our Feeds


Thursday, August 10, 2023

Anonymous

கல் – எளிய முஸ்லிம் அரபுக் கல்லூரி விவகாரம்: அதிபரை நீக்கிய பிரதிவாதிகளின் நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை - மனுவை தள்ளுபடி செய்யக் கோரிய நகர்த்தல் பத்திரமும் நிராகரிப்பு

 



(எம்.எப்.அய்னா)


கல் – எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்­லூ­ரி­ வி­வ­கா­ரத்தில் அத்­த­ன­கல்ல மாவட்ட நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள சிவில் வழக்கை தள்­ளு­படி செய்­யு­மாறு கோரி பிர­தி­வா­திகள் தாக்கல் செய்த நகர்த்தல் பத்­தி­ரத்தை குறித்த நீதி­மன்றம் நிரா­க­ரித்­துள்­ளது.


கல்­லூ­ரியின் முகா­மைத்­துவ சபை உறுப்­பி­னர்கள், பெற்றோர், பழைய மாண­வர்கள் இணைந்து, தாக்கல் செய்­துள்ள கல் எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்­லூரி விவ­காரம் குறித்த சிவில் வழக்கு, பிர­தி­வா­தி­களின் நகர்த்தல் பத்­தி­ரத்­துக்கு அமைய நேற்று முன் தினம் 7 ஆம் திகதி அத்­த­ன­கல்ல மாவட்ட நீதி­பதி கேசர சம­ர­தி­வா­ஹர முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது.


மனு­தா­ரர்கள் சார்பில் சட்­டத்­த­ரணி அர­விந்து மன­துங்க ஆரச்­சி­யுடன் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் ஆஜ­ரானார்.

அந்த வழக்கின் பிர­காரம், சட்ட ரீதி­யான செயலர் என கூறும் நூர் மொஹம்மட் மொஹம்மட் மிப்லி, சட்ட ரீதி­யான பொரு­ளாளர் எனக் கூறப்­படும் அப்துல் ஹமீட் மொஹம்மட் கலீல், அக்­கல்­லூ­ரியில் கல்வி பயிலும் இரு மாண­வி­யரின் பெற்­றோர்­க­ளான பிர்­தெ­ளவுஸ் மொஹம்மட் புஹாரி, மொஹம்மட் அப்னாஸ் மொஹம்மட் பர்ஹான், குறித்த கல்­லூ­ரியின் பழைய மாண­வியர் சங்க தலைவி சுல்­பிகார் ஜுனைட் மற்றும் செய­லாளர் ஜமீலா உம்மா மொஹம்மட் அஷ்ரப் ஆகி­யோரே மனு­தா­ரர்­க­ளாவர்.


வழக்கில் பிர­தி­வா­தி­க­ளாக மொஹம்மட் டில்ஷாத் பாசில், அர்ஷாட் மொஹம்மட் இக்பால், மொஹம்மட் பயாஸ் சலீம், மொஹம்மட் ஜமீல் அஹமட், மொஹம்மட் ரிஷாட் சுபைர் ஆகியோர் பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

இந்த நிலையில் பிர­தி­வா­தி­க­ளுக்­காக ஆஜ­ரான சட்­டத்­த­ரணி, நீதி­மன்ற நியா­யா­திக்கம் தொடர்பில் கேள்வி எழுப்பி மனுவை தள்­ளு­படி செய்யக் கோரினார்.

எனினும் மனு­தாரர் தரப்பு சட்­டத்­த­ரணி, நீதி­மன்ற நியா­யா­திக்கம் தொடர்பில் ஏற்­க­னவே இந்த நீதி­மன்றம் கடந்த ஜூன் 2 ஆம் திகதி கட்­டளை ஒன்­றினை பிறப்­பித்­துள்­ளதை சுட்­டிக்­காட்டி, நகர்த்தல் பத்­தி­ரத்தை நிரா­க­ரிக்­கு­மாறு கோரினர்.


இதன்­போது, பிர­தி­வா­தி­களின் சட்­டத்­த­ரணி, கல் எலிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்­லூ­ரியின் அதி­பரை அப்­ப­த­வி­யி­லி­ருந்த்து நீக்க எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்கை தொடர்பில் மன்றில் பிரஸ்­தா­பித்­தனர். அதி­பரை நீக்­கிய நட­வ­டிக்­கைக்கு மனு­தாரர் தரப்பு சட்­டத்­த­ரணி மன்றில் கடும் எதிர்ப்பு வெளி­யிட்டார்.


இந் நிலையில் இந்த வழக்கின் ஆரம்­பத்தில் இருந்த நிலைமை வழக்கு முடியும் வரையில் பேணப்­படல் வேண்டும் என ஏற்­க­னவே காணப்­பட்­டுள்ள இணக்கம் மீறப்­படல் கூடாது என சுட்­டிக்­காட்­டிய நீதி­மன்றம், அதி­பரை நீக்­கிய நட­வ­டிக்­கையை தடுத்து உத்­த­ர­விட்­டது. 


இந் நிலையில், மனு தொடர்­பி­லான ஆட்­சே­ப­னைகள் இருப்பின் அதனை சமர்ப்­பிக்க பிர­தி­வா­தி­க­ளுக்கு கால அவகாசம் அளித்துள்ள நீதிமன்றம், எதிர்வரும் 25ம் திகதி அந்த ஆட்சேபனைகளை முன் வைக்குமாறு (நீதிமன்ற நியாயாதிக்கம் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் உள்ளடக்கி) பிரதிவாதிகளுக்கு அறிவித்தது.


- Vidivelli

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »