சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் அமுல்படுத்தப்படாமல் இருந்திருந்தால் மலையக மக்கள் இன்று ஒரு பலமிக்க சமூகமாக இருந்திருப்பார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
தனியார் வானொலியில் நேற்று ஒலிபரப்பான நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பட்டார்.
அதேநேரம், அது முஸ்லிம் மக்களுக்கும் பெரும் சக்தியாக இருந்திருக்குமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.