Our Feeds


Saturday, August 5, 2023

News Editor

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை விரைவுபடுத்த இந்தியா ஆதரவு


 இந்த நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலின் அடிப்படை அடித்தளமான இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள  திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்திய-இலங்கை திட்ட கண்காணிப்பு குழு தீர்மானித்துள்ளது.

 

இந்திய உயர்ஸ்தானிகர் இத்திட்டத்தின் மொத்த மதிப்பிடப்பட்ட செலவில் 15% மதிப்பிலான காசோலையை, அதாவது 450 மில்லியன் இந்திய ரூபாயை, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முன்கூட்டிய கட்டணமாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் திரு.கனக ஹேரத்திடம் கையளித்தார்.

 

தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்திய உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தின் முதல் செயலாளர் எம். எல்டோஸ் மேத்யூ, செயலாளர், தொழில்நுட்ப அமைச்சகம், பேராசிரியர் எம்.டி. குணவர்தன, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் கலாநிதி சுலக்ஷா ஜயவர்தன ஆகியோர் இன்று  ஜனாதிபதி அலுவலகத்தில் கண்காணிப்பு குழு கூடிய போது இது தொடர்பில் கலந்துரையாடினர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »