Our Feeds


Friday, August 11, 2023

News Editor

கார்களை விடுவிப்பதற்கான நிதி மோசடிடியில் ஈடுபட்டவர் கைது


 ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில், இறக்குமதி செய்யப்பட்ட 3 கார்களை விடுவிப்பதற்கான நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கொழும்பு மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலவத்துகொடை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய குறித்த சந்தேகநபர் அழகுக்கலை நிபுணர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 பேர் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய அவர் கைதானதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பாட்ட குறித்த நபர் முறைப்பாட்டாளர்களிடம் இருந்து 62 லட்சத்து 72 ஆயிரம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் இது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »