Our Feeds


Thursday, August 24, 2023

SHAHNI RAMEES

வடமராட்சி விபத்தில் சிறுவன் தீயில் கருகி பலி !

 


யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் ரிப்பர் ரக வாகனமும்,

மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் 14 வயதான சிறுவன் சம்பவ இடத்திலேயே எரிந்து உயிரிழந்தார். மற்றொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கொற்றாவத்தையில் இன்று (24) மதியம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 


வளைவொன்றில் டிப்பர் வாகனமும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. 




விபத்தை தொடர்ந்து மோட்டார் சைக்கிள் தீப்பற்றியுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த 14 வயதான சிறுவன் படுகாயமடைந்த நிலையில், தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனா். 




22 வயதான முள்ளிவளையை சேர்ந்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »