Our Feeds


Tuesday, August 22, 2023

News Editor

பெரஹெரவில் மின்சாரம் தாக்கி பெண் பலி


 பெல்லன்வில ரஜமஹா விகாரையில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற இறுதி ரந்தோலி பெரஹெரவை பார்வையிட சென்ற பெண்ணொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

அத்திடிய பிரதேசத்தில் வசித்து வந்த 67 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மின்சார சபையின் அனுமதியைப் பெறாமல் பிரதான வீதியின் மின் அமைப்பிலிருந்து ஒப்பந்ததாரர் சட்டவிரோதமாகவும் பாதுகாப்பற்றதாகவும் மின்சாரத்தைப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த குற்றச்சாட்டின் பேரில் பொரலஸ்கமுவ பொலிஸார் இன்று (21) காலை ஒப்பந்ததாரரை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »