பாராளுமன்றத்திற்கு வெளியே ஜாம் போத்தல் மற்றும் ரின் பால் குவளை ஒன்றை திருடி எடுத்துச் செல்ல முற்பட்டதாக கூறப்படும் சமையல்காரர் ஒருவர் இன்று (4) பிற்பகல் பாராளுமன்ற காவற்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான சமையல்காரர் தனது பணியை முடித்து , பாராளுமன்ற பிரதான நுழைவாயிலில் சென்றபோது அவர் வைத்திருந்த பையை பொலிஸார் சோதனை செய்தனர். அப்போதே
பாராளுமன்றத்தின் சமையலறையில் இருந்து ஜாம் போத்தல் மற்றும் ரின் பால் குவளை என்பன திருடப்பட்டு எடுத்துச் செல்லப்படுவது தெரியவந்துள்ளது..
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக வெலிக்கடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். முன்னதாக, பாராளுமன்ற சமையலறையில் இருந்து உணவுப் பொருட்களை எடுத்துச் சென்ற பல ஊழியர்கள் பாராளுமன்ற காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.