Our Feeds


Saturday, August 5, 2023

News Editor

கல்கிஸ்ஸ மற்றம் காங்கேசன்துறைக்கு இடையில் புதிய ரயில்!


 காங்கேசன்துறைக்கும் கல்கிஸ்ஸவிற்கும் இடையில் ‘யாழ்நிலா’ என்ற புதிய நகரங்களுக்கு இடையேயான விரைவு ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ரயில் நேற்று (04) இரவு முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக அதன் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்தார்.

இம்மாதம் 18ஆம் திகதிக்கு பின்னர் நல்லூர் கோவிலின் திருவிழா காலத்தை முன்னிட்டு தினமும் இந்த ரயில் இயக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »