Our Feeds


Thursday, August 10, 2023

Anonymous

பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது - இம்ரான்கானுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

 



பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் பதவிக் காலம் வரும் 12ம் திகதி நிறைவடைகிறது. 


பதவிக் காலம் முடியும் முன்பாகவே பாராளுமன்றம் கலைக்கப்படும் என பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்தார். 


இதையடுத்து, பாராளுமன்றத்தை கலைக்க கோரி பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார்.


இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில் ,


பாராளுமன்றத்தை கலைக்கும்படி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளேன். பின்னர் இடைக்கால அரசாங்கம் பொறுப்பேற்கும் என தெரிவித்தார். 


இந்நிலையில், பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் பரிந்துரையை ஏற்று பாகிஸ்தான் பாராளுமன்றத்தை நேற்று நள்ளிரவு கலைத்து ஜனாதிபதி ஆரிப் ஆல்வி உத்தரவிட்டுள்ளார். 


பாராளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டதால் தேர்தல் நடத்த 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »