Our Feeds


Tuesday, August 22, 2023

SHAHNI RAMEES

செஸ் உலகக்கிண்ணப் போட்டியில் பிரக்ஞானந்தா கார்ல்சன் மோதல்...!

 


அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் உலக செஸ் போட்டி நடைபெறுகிறது. அரை இறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். இறுதிப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனுடன் மோத இருக்கிறார்.



18 வயதை எட்டிய பிரக்னாநந்தா, பாபி பிஷர் , மேக்னஸ் கார்ல்சனுக்குப் பிறகு கேண்டிடேட்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்ற மூன்றாவது இளையவர் ஆவார். 2005 ஆம் ஆண்டு நாக் அவுட் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வந்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »