Our Feeds


Monday, August 21, 2023

News Editor

ருமேனியாவில் வேலை தருவதாகக் கூறி 83 இலட்சம் ரூபா மோசடி


 முறையான அனுமதிப்பத்திரம் இன்றி ருமேனியாவில் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 83 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினர் ஒருவரை கைது செய்துள்ளது.

குறித்த நபர் ருமேனியாவில் தொழில் வழங்குவதற்காக 813,000 ரூபாவை பெற்றுக்கொண்டதாகவும், அவர் வாக்குறுதியளித்தபடி வேலை வழங்கவில்லை எனவும் பணியகத்துக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இந்த முறைப்பாட்டுக்கு மேலதிகமாக சந்தேக நபருக்கு எதிராக பணியகத்துக்கு 9 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »