Our Feeds


Saturday, August 5, 2023

Anonymous

5 இஸ்லாமிய அமைப்புகள் மீதான தடைநீக்கத்தை மீள ஆராய மாட்டோம் – அரசாங்கம் திட்டவட்டமாக அறிவிப்பு

 



ஐந்து இஸ்லாமிய அமைப்புகளின் தடை நீக்கம் குறித்து மீளஆராயப்போவதில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதலை தொடர்ந்து ஐந்து இஸ்லாமிய அமைப்புகளிற்கு எதிராக விதிக்கப்பட்டதடைiயை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நீக்கியுள்ளார்.

எனினும் கத்தோலிக்க திருச்சபை அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இதனை கண்டித்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் தடைநீக்கப்பட்டமை குறித்துஅரசாங்கம் மீள்பரிசீலனை செய்யுமா என்ற மோர்னிங்கின் கேள்விக்கு பதிலளித்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தற்போதைக்கு இது குறித்து மீள்பரிசீலனை செய்யும் திட்டம் எதுவுமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

புலனாய்வு பிரிவினரும் பாதுகாப்புடன் தொடர்புபட்டவர்களும் இணைந்து தடைகளை நீக்கும் முடிவை எடுத்தனர் என தெரிவித்துள்ள அவர் விமர்சனங்கள் உள்ளதை நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம்,எனினும் இதனை தீவிரமாக ஆராய்ந்த பின்னரே செய்துள்ளோம் அரசியல்வாதிகள் எவரும் இதில் தொடர்புபடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து நாங்கள் மீள்பரிசீலனை செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தடைநீக்கப்பட்ட அமைப்புகளின் நடவடிக்கைகளை உரிய அமைப்புகள் தொடர்ந்தும் கண்காணிக்கும் எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கண்காணிப்பு தொடரும் அவர்கள் பிழை செய்தால் தடை மீண்டும் நடைமுறைக்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி : வீரகேசரி

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »