தம்புத்தேகம – ஹிரியகம பகுதியில் இன்று (04) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லொறி ஒன்றும் , பஸ் ஒன்றும் மோதி கொண்டதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மேலும் காயமடைந்த 4 பேர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.