இத்தாலியின் லம்பேடுசா தீவில் அகதிகள் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 41 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துனிசியாவில் உள்ள ஸ்ஃபாக்ஸில் இருந்து புறப்பட்ட குறித்த படகு இத்தாலியின் கரைக்கு செல்லும் வழியில் மூழ்கிய நிலையில், அந்த படகிலிருந்து தப்பிய நான்கு பேர் மீட்புப் படையினரிடம் விபத்து குறித்த விபரங்களை கூறியதாக உள்ளூர் செய்திகள் தெரிவித்துள்ளன.
லம்பேடுசா இத்தாலியின் தெற்கே உள்ள தீவு. 2000 களின் முற்பகுதியில் இருந்து, முக்கியமாக லிபியாவிலிருந்து வந்து, குடியேறுபவர்களுக்கான முக்கிய ஐரோப்பிய நுழைவுப் புள்ளியாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.