Our Feeds


Sunday, August 6, 2023

Anonymous

பாகிஸ்தானில் பாரிய ரயில் விபத்து - 25 பேர் பலி.

 



பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.

 

பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து 275 கிலோமீற்றர் தொலைவில் இந்த ரயில் விபத்து இடம்பெற்றுள்ளது.

கராச்சியில் இருந்து ராவல்பிண்டிக்கு சென்ற ஹசரா எக்ஸ்பிரஸ் ரயில் ஷஹசாத்பூர் மற்றும் நவப்ஷாஸ் பகுதிகளுக்கு இடையே உள்ள சஹரா ரயில் நிலையத்திற்கு அருகே  திடீரென்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 

தடம் புரண்டதில் ரயிலின் 10 பெட்டிகள் கவிழ்ந்தன. இதன்போது இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 50பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பாகிஸ்தானிய செய்திகள் தெரிவிக்கின்றன.

மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாமெனவும் பாகிஸ்தானிய செய்திகள் தெரிவிக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »