Our Feeds


Wednesday, August 16, 2023

SHAHNI RAMEES

சினோபெக், செப். 20 இலங்கையில்.. - பெட்ரோல், டீசல் விலை குறையும் சாத்தியம்..!

 

சீன எண்ணெய் நிறுவனமான சினோபெக், செப். 20 ஆம் திகதி இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.



இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,



அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையை விட குறைந்த விலைக்கு எரிபொருளை விற்க அனுமதிக்கப்படும் என தெரிவித்தார்.



சினோபெக்கின் இலங்கை பிரவேசம் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு மீதான அழுத்தத்தை குறைக்க உதவும் என குறிப்பிட்டுள்ளார்.



இதையடுத்து மேலும் இரண்டு சர்வதேச எரிபொருள் விநியோகஸ்தர்கள் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்திற்குள் செயற்பாடுகளை ஆரம்பிப்பார்கள் என எதிர்பார்க்கிறது என தெரிவித்தார்.



புதிய ஒப்பந்தத்தின் கீழ், சீன நிறுவனத்திற்கு 150 எரிபொருள் நிலையங்களை இயக்க 20 ஆண்டு உரிமம் வழங்கப்படும், மேலும் 50 புதிய எரிபொருள் நிலையங்களில் முதலீடு செய்ய முடியும் மேலும் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »