மிசோரம் மாநிலம், சாய்ராங் பகுதிக்கு அருகே கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
மிசோரம் மாநிலத்தில் புதிதாக ரயில்வே பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகின்ற இந்நிலையில் சாய்ராங் பகுதியில், 35 முதல் 40 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனா். இந்நிலையில் குறித்த பாலம் திடீரென இடிந்து விழுந்ததிலேயே 17 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இடிந்து விழுந்த ரயில்வே பாலத்தின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி இடம்பெற்று வருகின்றனதாக இந்திய ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.