மாகாண சபைகளுக்கு அதிகாரத்தை வழங்கும் 13 ஆவது திருத்தம் தொடர்பில் சர்வகட்சி மாநாடு மீண்டும் கூடவுள்ளது. அதற்கான அழைப்பு நேற்று அனுப்பப்பட்டுள்ளது. எதிர்வரும் 15 இல் மாநாடு நடத்தப்படவுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி எதிர்க்கட்சிகளின் ஆலோசனை பெற முன் 13 தொடர்பில் மொட்டுவின் ஆதரவை பெறுமாறும் பொதுஜன பெறமுனவுக்கு இதில் உடன்பாடு இல்லை என்றும் ஜனாதிபதி, மொட்டுவின் உறுதியான நிலைப்பாட்டை அறிவித்த பின் ஐக்கிய மக்கள் சக்தி தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என்றும் அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்..