யாழ்ப்பாணத்தில் இருந்து காலி கோட்டை வரையான 566 கிலோ மீட்டர் தூரத்தை நடை பயணத்தின் ஊடாக அடையும் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள பொகவந்தலாவையைச் சேர்ந்த தயா - விக்னேஸ் சகோதரர்களை நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் கொழும்பில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து அநுராதபுரம் - புத்தளம் - நீர்கொழும்பு வழியாக அவர்கள் கொழும்பை வந்தடைந்ததுடன் கொழும்பில் இருந்து காலி கோட்டை நோக்கி சாதனை பயணத்தை தொடர்கின்றனர்.