Our Feeds


Friday, June 2, 2023

Anonymous

BREAKING: கஜேந்திரகுமார் எம்.பியை துப்பாக்கியால் சுட முயற்சி ?

 



யாழ். கஜி


பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைத் தாக்கிச் துப்பாக்கியால் சுட முயற்சி செய்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.


 

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு இதனை தெரிவித்துள்ளார்.

 

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மக்கள் சந்திப்புக்காக வடமராட்சி பகுதிக்கு சென்ற போது அவரை பின்தொடர்ந்து சென்ற. இரண்டு புலனாய்வாளர்கள் அவரை தலைக்கவசத்தினால் (ஹெல்மெட்) தாக்கி கீழே விழுத்தி விட்டு தப்பித்து ஓடினர்.

 

இதன்போது அவர்களை துரத்திச் சென்றபோது அங்கிருந்த பாடசாலை ஒன்றுக்கு அருகே நின்ற பொலிஸார் தனது கைத்துப்பாக்கியை எடுத்து சுடுவதற்கு முயற்சித்துள்ளதாக தனது அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »