Our Feeds


Saturday, June 17, 2023

Anonymous

பெண் காதி நீதிபதி நியமனத்திற்கு உலமா சபையும் ஆதரவு தெரிவித்துள்ளது - மு.க தலைவர் ரவுப் ஹக்கீம்

 



பெண்களையும் காதி நீதிபதிகளாக நியமிப்பதை அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை ஆரம்பத்தில் எதிர்த்தாலும், இப்போது கருத்து ஒருமைப்பாட்டுக்கு வந்துள்ளமை நல்ல விடயம். என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 


தனியார் தொலைக்காட்சி சேவையொன்றில் நேர்காணலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 


பெண்களுக்கு சமவுரிமை வழங்கப்பட வேண்டும். பெண்களையும் காதி நீதிபதிகளாக நியமிப்பதில் எந்தத் தவறும் இல்லை. என்பதை பொதுவாக நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். 


அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை பெண்களையும் காதி நீதிபதிகளாக நியமிப்பதை ஆரம்பத்தில் எதிர்த்தாலும், இப்போது கருத்து ஒருமைப்பாட்டுக்கு வந்துள்ளார்கள் என்பது நல்ல விடயம். எனவே இது சுமூகமாக முஸ்லிம் சமூகத்தின் எல்லாத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் விரைவில் சாத்தியமாகும் என்பதில் எமக்கு நம்பிக்கையிருக்கிறது. என்கிறார் ரவுப் ஹக்கீம். (SN)


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »