Our Feeds


Monday, June 5, 2023

Anonymous

ஊக்க மருந்து சர்ச்சை | நிலானி ரத்நாயக்கவுக்கு போட்டித் தடை!

 



ஊக்கமருந்து குற்றச்சாட்டு காரணமாக இலங்கையின் நெடுந்தூர ஓட்ட வீராங்கனை நிலானி ரத்நாயக்கவுக்கு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. 


இராணுவ மெய்வல்லுநர் விளையாட்டு போட்டியில் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக எழுந்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 


இதன்படி, ஆசிய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி உட்பட பல போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை அவர் இழக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக நிலானி ரத்நாயக்க, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் பங்குபற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »