இந்த நாட்டிற்கு சரியான தலைமைத்துவத்தை வழங்கக் கூடிய நபரைத் தான் கண்ணாடியைப் பார்க்கும் போது காண்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இந்நாட்டிற்கு சரியான தலைமைத்துவத்தை யாரால் வழங்க முடியும் எனக் கேள்வி எழுப்பிய போது அவர் இவ்வாறு தெரிவித்ததுடன் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்கு ஏற்றவர் இல்லையென்றும் தெரிவித்தார்.