Our Feeds


Friday, June 9, 2023

News Editor

பரீட்சைக்குத் தோற்றிய சிறை கைதி தப்பியோட்டம்


 கொலை மற்றும் கைக்குண்டு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவர் ஒருவர் சாதாரணத்தரப் பரீட்சைக்கு விடையளிக்கும் போது சிறைச்சாலை அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

பாணந்துறை தொடங்கஹவத்த பெத்மேகம பிரதேசத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

 

சாதாரணத் தரப் பரீட்சையின் இறுதி நாளான நேற்றைய தினம் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் பரீட்சை நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாக அப்பகுதியின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

பரீட்சைக்கு தோற்றும் போது மலசலகூடத்திற்குச் செல்ல வேண்டும் என சந்தேக நபர் மேற்பார்வையாளரிடம்  தெரிவித்ததாகவும், அதன்படி சிறைச்சாலை அதிகாரி சந்தேக நபரை பரீட்சை மண்டபத்திற்கு அருகிலுள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

அப்போது, ​​சிறை அதிகாரியை தள்ளிவிட்டு அவர் தப்பியோடிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இது தொடர்பில் சப்புகஸ்கந்த பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சப்புகஸ்கந்த பொலிஸார் சிறுவனை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »