Our Feeds


Friday, June 16, 2023

SHAHNI RAMEES

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் பரிசுத்தொகை அதிகரிப்பு

 

3-வது கிராண்ட்சிலாமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஜூலை 3 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை லண்டனில் இடம்பெறவுள்ளது.



இந்த நிலையில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மொத்த பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் போட்டியின் பரிசுத்தொகை ரூ.464 கோடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இது கடந்த முறை வழங்கப்பட்ட மொத்த பரிசுத் தொகையை விட 11 சதவீதம் அதிகமாகும். ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சம்பியன் பட்டம் பெறுவதற்கு தலா ரூ.24.41 கோடி கிடைக்கும். 



முதல் சுற்றுடன் வெளியேறுபவர்கள் தலா ரூ.57 இலட்சம் பெறவார்கள். 2019 ஆம் ஆண்டு கொரோனா நோய் தொற்றுக்கு முன்னதாக வழங்கப்பட்ட பரிசுத் தொகையைவிட தற்போது 17.1 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »