Our Feeds


Monday, June 12, 2023

Anonymous

சிம்பாப்வேயில் ஹோட்டல் அறைகளிற்கு வெளியே பலமணிநேரம் காத்திருந்த இலங்கைஅணி வீரர்கள் - நடந்தது என்ன?

 



உலக கிண்ண தகுதிச்சுற்றுப்  போட்டிகளிற்காக சிம்பாப்வே சென்ற இலங்கை அணியினர் அந்த நாட்டில் ஹோட்டலில் அறைகளிற்கு வெளியே சோர்வடைந்த நிலையில் பல மணிநேரம் காத்திருப்பதை காண்பிக்கும் படங்கள் சமூக ஊடங்களில் வெளியாகி இலங்கை கிரிக்கெட் ரசிகர்களிற் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இலங்கை கிரிக்கெட் சபை இது குறித்து  விளக்கமளித்துள்ளது.

சிம்பாப்வேயில் ஹோட்டலிற்கு வெளியே காத்திருக்கும் படங்களை இலங்கை அணியின் பல வீரர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

சதீரசமரவிக்கிரமவும மகேஸ்தீக்சனவும் பகிர்ந்துகொண்டுள்ள பல படங்கள் வீரர்கள் பலர் பல மணிநேரம் காத்திருப்பதை காண்பித்துள்ளன.

இன்ஸ்டகிராமில் பதியப்பட்ட படங்கள் பின்னர் அழிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை இது குறித்து விளக்கமளித்துள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் இலங்கை அணியினர் ஹோட்டலிற்கு மதியம் வந்து சேர்ந்தனர் அவர்கள் வந்தவேளை மற்றுமொரு அணியும் வந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களிற்கு உரிய அறைகளை ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.

எனினும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை இந்த விடயத்தை  ஹோட்டல் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததை தொடர்ந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது என ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »